நான் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தெடாவூர் என்ற பெரிய கிராமத்தில் பிறந்து வளர்கிறவன்.. அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியனும் கூட.. சிறுவயது முதலே கணிதத்தில் ஈடுபாடு உண்டு ஆதலால் கணிதம் கற்பது, கற்பிப்பது இரண்டையும் மன மகிழ்வுடன் செய்துவருபவன்..

சமூக அக்கறையுடன் எழுதப்படும் அத்தனை எழுத்துக்களின் நேசன் நான்.. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் தனிமனித நன்நெறியிலும், அறிவு அல்லது அறிவியல் சார்ந்த மனநிலையிலும் மாற்றத்தை ஏற்ப்படுத்தவில்லை எனில் அவரின் எழுத்து பயனில்லாத எழுத்தே என்ற கொள்கை கொண்டோன்..

சமூகம், கணிதம் தொடர்பான கருத்துக்களை மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொண்டுவரும் நான் அதைப் பற்றி இணையங்கள் தொடங்கி அதில் தொடர்ந்து எழுதியும் வருகிறேன்..

யூத்ஃபுல் விகடன் போன்ற இணைய இதழ்களில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதிகொண்டுவரும் இளைஞன் நான்..

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:Thedavuranbu&oldid=5384" இலிருந்து மீள்விக்கப்பட்டது