ஈசாப் நீதிக் கதைகள்/நெருப்பில் நத்தை

ஒரு விவசாயியின் மகனான ஒரு சிறுவன் நத்தைகளை நெருப்பில் வாட்டிக் கொண்டிருந்தான். நெருப்பில் வாட்டப்பட்ட போது அவற்றிலிருந்து ஒலி எழும்பியது. அவன் கூறியதாவது "உங்கள் வீடுகள் நெருப்பில் எரிகின்றன. ஆனால் நீங்கள் செய்வதோ பாடுவது மட்டுமே" என்றான்.


நீதி: தவறான நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் விமரிசிக்கத் தக்கதாகும்.