ஈசாப் நீதிக் கதைகள்/சோதிடர்

ஒரு சோதிடர் வானத்தை பார்த்துக் கொண்டவாறே நடந்து சென்றதால் ஒரு குழியில் விழுந்தார். புத்திசாலி மற்றும் நகைச்சுவை திறன் உடைய ஒரு அடிமைப் பெண் தன்னுடைய தலைக்கு மேல் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி தனது காலுக்கு கீழ் என்ன இருக்கிறது என்பதை கவனிக்காமல் விழுந்ததை சுட்டிக் காட்டினாள்.


நீதி: நீ உன்னை முதலில் அறியாமல் இந்த உலகத்தை உன்னால் அறிய முடியாது.