ஈசாப் நீதிக் கதைகள்/குள்ளநரியும், சிறுத்தையும்

ஒரு குள்ளநரியும், ஒரு சிறுத்தையும் தங்களது உடல் தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தன. இரண்டும் தாமே மிகுந்த அழகானவர் என்று கூறின. "என்னுடைய அழகான தோலைப் பார். அதற்கு ஈடாக உன்னிடம் எதுவும் இல்லை" என்று சிறுத்தை கூறியது. "உன்னுடைய தோல் அழகாக இருக்கலாம். ஆனால் என்னுடைய புத்திக் கூர்மை அதை விட அழகானது" என்று நரி கூறியது.


நீதி: பொய் கூறுபவர்களும், பெருமை பேசுபவர்களும் தங்களைத் தாங்களே தோற்கடித்துக் கொள்வார்கள்.