செடிகள் கொடிகள் மரங்கள்/மரங்கள்/பவழ மல்லி

(பவழ மல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பவழ மல்லியை மரம் என்றோ செடி என்றோ கூற இயலவில்லை.பல ஆண்டுகளாக வளர்ந்தபின் இவை மரம்போல் இருக்கின்றன.இதன் பூக்கள் வெண்ணிறமானவை.பூக்களின் காம்புகள் பவழம் போல் சிவப்பாக காணப் படுவதால் இதற்கு பவழ மல்லி எனப் பெயர் வந்தது.இரவு நேரத்தில் பூக்கிறது.பூக்கள் மலரத்தொடங்கி விட்டால் காற்றில் இனிமையான மணம் பரவத்தொடங்கிவிடும்.