இந்தியா: தமிழகத்தில் சான்றிதழ்களைப் பெறுவதும் விண்ணப்பங்களை அளிப்பதும் எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 271:
*
.வருவாய் துறையின் சார்பாக பல்வேறு வகையான பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் . இருந்த போதிலும் வருவாய் துறையில் உள்ள ஊழியர்களின் மத்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் துறையை சார்ந்தவர்கள் அல்ல என அன்னியமாக பார்க்கும் சூழலே இன்று நிலவி வருகிறது . எனவே வருவாய்த் துறை என்பது நிர்வாக அலுவலர்களின் தாய்த் துறை . கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாகத் துறையைச் சார்ந்தவர்கள் . இன்று சட்டம் ,ஒழுங்கு பிரச்சினைகள் தவிர மற்றபடி வருவாய்த் துறைக்கும் மற்ற துறைகளுக்கும் அதிகம் தொடர்பு இருக்கவில்லை ,ஒவ்வொரு துறையும் ஒரு தனித்த அமைப்பாக செயல்ப்ட்டுக் கொண்டிருக்கின்றன . கிராம நிர்வாக அலுவலர்களே மற்ற துறைகளை , வருவாய்த் துறையுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகின்றனர் .
*
கிராமங்களில் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளும் அரசின் நிகழ்ச்சிகளின் போது அதற்காக ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு பணிகளை மேற்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்த கிராம நிர்வாக அலுவலர்களை உயர் அலுவலர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை . கிராம நிர்வாக அலுவலர்களை வழ்த்திப் பேசி அவர்களை உற்சாகப் படுதுவதற்குக் கூட உயர் அலுவலர்கள் முன் வருவதில்லை . இது போன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களோடு மக்களாக நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வு வேடிக்கையானது . தன்னுடைய பணிக் காலங்களில் வருவாய் ஆய்வாளர் , வட்டாச்சியர் , கோட்டச்சியர் , மாவட்ட ஆட்ச்சியர் என பொறுப்பு வகிக்கின்ற அந்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே தாங்கள் பணிபுரிகின்ற இடத்திலேயே தங்கி வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது . ஆனால் அதிக பட்சம் பதவி உயர்வுகளே இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் காலம் வரை தன் சொந்தங்களைப் பிரிந்து அதே கிராமத்தில் தங்கி பணிபுரிய வேண்டும் என்ற நிலை ஒரு தனி மனித உரிமை மீறலாகவே தோன்றுகிறது .
*
கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு மாதத்தில் முப்பது நாட்களும் இரவு பகலாக வேலை பார்த்தாலும் இவர்களின் பணி ஓய்ந்து விடாது . இவர்களுக்கு முறையான விடுமுறை இல்லை என்பதும் ஒரு மிகப் பெரிய குறையாக உள்ளது .அரசின் பல்வேறு துறைகளில் மன உழைச்சல் இல்லாத மென்மையான பணிகளை மேற் கொள்பவர்களுக்கு கூட அதிகப்படியான ஊதியங்கள் வழங்கப்படுகிறது . ஆனால் ஆக்கம் தரும் மிக உன்னதமான மக்கள் நலப் பணியை மேற்கொள்ளும் , உடலாலும் , மனதாலும் சோர்வடைந்திருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவே . தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்தாலும் கூட இது போன்ற நிர்வாக அடிப்படையில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதினால் ஒரு சில வருடங்களிலேயே அரசுப் பணித் தேர்வுகளை எழுதி வேறு துறைகளுக்குச் சென்று விடுகின்றனர் .இதனால் கிராம நிர்வாகம் வழுவிழந்து , பொலிவு இழந்து கணப்படுகிறது என்பது இன்று உள்ள நிலை . ,
*