தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
ஆணும் பெண்ணும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் மயங்கி இணைவது போலவும், நண்பர் இருவர் மயங்கி இணைவது போலவும் எழுத்துக்கள் இணைவது எழுத்து மயக்கம்.
===எழுத்தோடு எழுத்து மயங்குதல்===
*# உயிரெழுத்தை அடுத்து மெய்யெழுத்து வந்து மயங்கும். (ஆண், கண்)
*# தன் மெய்யோடு தன் மெய் மயங்கும் (பக்கம், அங்ஙனம், உச்சி, மஞ்ஞை, பட்டம், அண்ணம், முத்து, முந்நீர், அப்பா, அம்மா, அய்யா, முல்லை, தெவ்வர், வெள்ளம், வெற்றி, கன்னம் - என்பன. ர ஒற்றும், ழ ஒற்றும் தன் மெய்யோடு தான் மயங்குவது இல்லை. இவை தம்முள் ஒத்து இணைந்தும் மயங்குவது இல்லை)
*# மெல்லின மெய் தன் ஒலி கொண்ட வல்லின மெய்யோடு (நெடுங்கணக்கு வரிசையில் தனக்கு மேலே உள்ள மெய்யோடு) மயங்கும். (கங்குல், மஞ்சள், நண்டு, பந்து, பம்பரம், நன்று)
*# டகர மெய்யோடு - கட்க (திருடுக), கட்சிறார் (திருட்டுச் சிறார்), கட்ப (திருட என்னும் வினையெச்சம்)
*# றகர மெய்யோடு - கற்க, கற்சிறார், கற்ப
*# லகர மெய்யோடு - செல்க, செல்சிறார், செல்ப, கொல்யானை
*# ளகர மெய்யோடு - கொள்க, கொள்சிறார், கொள்ப, வெள்யானை
*# ணகர மெய்யோடு - வெண்கலம், வெண்சாந்து, வெண்ஞாண், வெண்பலி, வெண்மாலை, மண்யாது, மண்வலிது
*# னகர மெய்யோடு - புன்கண், புன்செய், பொன்ஞாண், பொன்பெரிது, பொன்மாலை, பொன்யாது, பொன்வலிது
*# ஞகர மெய்யோடு - உரிஞ்யாது {உரிய்ம் தோலாகிய உரிஞ் யாது}
*# நகர மெய்யோடு - பொருந்யாது (பொருநர் முழக்கும் பொருந் யாது}
*# மகர மெய்யோடு - திரும்யாது (திரும்பும் திருகாணி யாது), நிலம்வலிது
*# வகர மெய்யோடு - தெவ்யாது (பகை யாது)
*# யகர மெய்யோடு - வேய்கடிது, வேய்சிறிது, வேய்தீது, வேய்ஞான்றது, வேய்நீண்டது, வேய்மாண்டது, வேய்யாது, வேய்வலிது
*# ரகர மெய்யோடு - வேர்கடிது, வேர்சிறிது, வேர்தீது, வேர்ஞான்றது, வேர்நீண்டது, வேர்மாண்டது, வேர்யாது, வேர்வலிது
*# ழகர மெய்யோடு - வீழ்கடிது, வீழ்சிறிது, வீழ்தீது, வீழ்ஞான்றது, வீழ்நீண்டது, வீழ்மாண்டது, வீழ்யாது, வீழ்வலிது
இக்காலத்தில் பெயர்களையும், பிறமொழிச் சொற்களையும் எழுத்து மயக்கம் இல்லாமல் எழுதிவருகின்றனர். (சென்ட்ரல், சென்ரல், ரத்னம்)
 
"https://ta.wikibooks.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது