சூரியக் குடும்பத்தில் மூன்றாவது கோள் பூமியாகும். [[உரினங்கள்]] வாழும் கோள் பூமி ஒன்றுதான். இது திடமான கோள் ஆகும். பூமியைச் சுற்றி கற்றுகாற்று மண்டலம் உள்ளது, அதில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான[[ உயிர்காற்று]]([[ஆக்ஸிஜன்]]) உள்ளது. எனவே புவியில் மனிதர்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ முடிகிறது. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனிடமிருந்து 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனை ஒருமுறைச் சுற்றி வர 365.24 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.இதுவே நமக்கு ஒரு [[ஆண்டு]] ஆகும். பூமிக்கு ஒரு துணைக் கோள் உண்டு. அதன் பெயர் [[சந்திரன்]] ஆகும்.