எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ படம்
பத்திகள் 16-17 முடிவு
வரிசை 10:
[14] நாம் வலுவின்றிப் பிறக்கின்றோம், நமக்கு வலு தேவை; ஒன்றுமே இல்லாமல் பிறக்கின்றோம், நமக்கு உதவி தேவை; அறிவின்றிப் பிறக்கின்றோம், தீர்வறிவு தேவை. பிறக்கும்பொழுது நம்மிடம் இல்லாத, வளர்ந்தபின் நமக்குத் தேவையான அனைத்தும் கல்வியால் கிடைக்கின்றது.
 
[15] நமக்கு இக்கல்வி இயற்கையில் இருந்தும், மாந்தர்களிடம் இருந்தும், பொருள்களில் இருந்தும் கிட்டுகின்றது. உடல் உறுப்புகளின் வளர்ச்சியும், சிந்தனைக் கூறுகளின் வளர்ச்சியும் இயற்கையின் கல்வி, இவ்வளர்ச்சியை நாம் பயன் படுத்திக்கொள்வது மாந்தர்களின் கல்வி, சுற்றுச்சூழல்களில் இருந்து நாம் பட்டறிவாகப் பெறுவது பொருள்களில் இருந்து நாம் பெறும் கல்வி.
 
[16] ஆக நாம் மூன்று ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றோம். எந்த மாணவருக்கு அவர்களின் வேறுபட்ட பாடங்கள் முரண்படுகின்றனவே அந்த மாணவர் தனக்குள் தான் இயல்பான சீரிசைவுடம் இருக்கமாட்டார்; எந்த மாணவருக்கு அப்பாடங்கள் இணங்கி ஒரே பொருளைத்தந்து ஒரே முடிவை நோக்கி செல்கின்றனவோ, அவர் நேரடியாக அவருடைய குறிக்கோளை எட்டுவார், தன்னுள் இசைவுடன் வாழ்வார். பின்னவர் செம்மையான வளர்ச்சி எய்தியவர்.
 
[17] கல்விக்கான இந்த மூன்று கூறுகளில், இயற்கையில் இருந்து பெறும் கல்வி நம் கையில் இல்லை; பொருள்களில் இருந்து பெறும் கல்வியும் ஒரு பகுதிதான் நம் கையில் உள்ளது; மாந்தர்களிடம் இருந்து பெறும் கல்வி ஒன்றுக்கு மட்டுமே நாம் முழு ஆசிரியர். இங்கும்கூட நம் வல்லமை பெரும்பாலும் மாயத்தோற்றம்தான், ஏனெனில் ஒரு குழந்தையைச் சூழ்ந்திருக்கும் எல்லோருடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் யார் கட்டுப்படுத்தி இயக்க முடியும்?
 
==முழுநூல்==
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது