எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நூல்-1 இன் பத்தி 6 வரை (10-15) முடிந்தது
வரிசை 6:
 
[13] செடிகள் பயிர்வளர்ப்பால் அவற்றின் அமைப்பைப்பெறும், மாந்தன் கல்வியால். ஒரு மாந்தன் உயரமாகவும் வலுவாகவும் பிறந்தால், அவனுடைய உருவவளவும் வலிமையும், அவற்றை அவன் பயன்படுத்தக் கற்கும் வரை அவனுக்குப் பயனற்றவை; அவை, பிறர் அவனுக்கு விரும்பி உதவ வருவதைக் கூட தடுத்துத் தீமை தரக்கூடும் [[குறிப்பு-3]]. அவன் பாட்டுக்கு அவனை விட்டால், தன் தேவைகளை அவன் உணரும் முன் அவன் துன்பத்தால் இறக்கவும் கூடும். குழந்தைநிலையில் (தனக்குத் தான்) உதவமுடியாதநிலையில் இருப்பதைக் கண்டு வருந்துகிறோம்; மாந்த இனமே அற்றுவிட்டிருக்கும், அவன் குழந்தைநிலையில் தொடங்காமல் இருந்திருந்தால் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.
 
[14] நாம் வலுவின்றிப் பிறக்கின்றோம், நமக்கு வலு தேவை; ஒன்றுமே இல்லாமல் பிறக்கின்றோம், நமக்கு உதவி தேவை; அறிவின்றிப் பிறக்கின்றோம், தீர்வறிவு தேவை. பிறக்கும்பொழுது நம்மிடம் இல்லாத, வளர்ந்தபின் நமக்குத் தேவையான அனைத்தும் கல்வியால் கிடைக்கின்றது.
 
[15] இக்கல்வி இயற்கையில் இருந்து, மாந்தர்களிடம் இருந்து, பொருள்களில் இருந்து கிட்டுகின்றது. உடல் உறுப்புகளின் வளர்ச்சியும், சிந்தனைக் கூறுகளின் வளர்ச்சியும் இயற்கையின் கல்வி, இவ்வளர்ச்சியை நாம் பயன் படுத்திக்கொள்வது மாந்தர்களின் கல்வி, சுற்றுச்சூழல்களில் இருந்து நாம் பட்டறிவாகப் பெறுவது பொருள்களில் இருந்து நாம் பெறும் கல்வி.
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது