எமிலி, அல்லது கல்வி பற்றி/நூல்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பத்தி 4 வரை
வரிசை 1:
[10] படைத்தவர் கைகளில் இருந்து புறப்படும் பொழுது அனைத்தும் நன்றாகவே உள்ளன; அனைத்தும் மாந்தன் கைகளில் சீரழிகின்றன. அவன் (மாந்தன்) ஒரு நிலம் பிறிதொரு பொருளை ஆக்க வற்புறுத்துகின்றான், ஒரு மரத்தில் மற்றொரு பழத்தை உருவாக்குகின்றான். வானிலையையும், இயற்கையின் கூறுகளையும், பருவங்களையும் கலந்து குழப்புகின்றான். அவன் நாயையும், குதிரையையும், அடிமையையும் சிதைக்கின்றான். அவன் அனைத்தையும் தலைகீழாக மாற்றுகின்றான் அனைத்தையும் மூளியாக்குகின்றான், அவன் சிதைப்புகளையும் அரக்கரையும் விரும்புகின்றான். அவன் இயற்கை உருவாக்கியவாறு எதையும் விரும்புவதில்லை, மாந்தனாகிய அவனுட்பட. அவனுக்கு மாந்தன் ஒரு சேணம் ஏற்றிய குதிரையைப் போல பயிற்றப்படவேண்டும்; அவன் தோட்டத்தில் உள்ள மரங்களைப் போல் அவனை புதுப்போக்குக்கு ஏற்ப வடிவமைக்கப்படவேண்டும்
 
[11] இவையின்றி அனைத்தும் இன்னும் மோசமாக இருக்கும்; நம் இனம் அரைகுறையாக இருத்தல் கூடாது. இப்பொழுதுள்ள நிலைமையின் படி மாந்தன் பிறந்த்தில் இருந்தே அவன் போக்கில் விட்டால் மற்ற அனைத்தையும் விட சிதைந்த நிலையில் இருப்பான். முற்சாய்வு, அதிகாரம், தேவை, எடுத்துக்காட்டு, ஆகிய நாம் மூழ்கி இருக்கும் எல்லா குமுக சூழல்களும்- அவனுடைய இயல்பை திணறச்செய்து அவற்றுக்கு ஈடாக எதையும் வைக்காது இருக்கும். மாந்தன் இயல்பு ஒரு நெடுஞ்சாலையின் நடுவே தற்செயலாக இடப்பட்ட நாற்று போல் இருக்கும்; இப்படியும் அப்படியுமாகச் சாய்ந்து விரைவில் வழிப்ப்போக்கரால்வழிப்போக்கர்களால் நசுக்கப்படும்.
 
[12] இது உங்களுக்காகத்தான் மென்மையான, முன்னோக்கான தாயே [[குறிப்பு-1]] - உங்களுக்குத் தெரியும் எப்படி போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் இருந்து விலகி மாந்தக் கருத்துகளில் இருந்து வளரும் இந்த இளம் நாற்றைக் காப்பாற்றுவது என்பது! நாற்று மடியும் முன்பு நீர் விட்டு பண்படுத்து, அதன் பழங்கள் ஒருநாள் உன் மகிழ்ச்சியாக விளங்கும். தொடக்கத்திலேயே உன் குழந்தையின் உள்ளத்தைச் சுற்றி வேலி அமை. வேறு ஒருவர் சுற்றுப்பஉற வட்டத்தைக் குறிக்கலாம், ஆனால் நீ மட்டுமே வேலி கட்ட வேண்டும் [[குறிப்பு-2]]
 
[13] செடிகள் பயிர்வளர்ப்பால் அவற்றின் அமைப்பைப்பெறும், மாந்தன் கல்வியால். ஒரு மாந்தன் உயரமாகவும் வலுவாகவும் பிறந்தால், அவனுடைய உருவவளவும் வலிமையும், அவற்றை அவன் பயன்படுத்தக் கற்கும் வரை அவனுக்குப் பயனற்றது; அவை பிறர் அவனுக்கு விரும்பி உதவ வருவதைக் கூட தடுத்துத் தீமை தரக்கூடும் [[குறிப்பு-3]]. அவன் பாட்டுக்கு அவனை விட்டால் அவன் தேவைகளை அவன் உணரும் முன் அவன் துன்பத்தால் இறக்கவும் கூடும். குழந்தைநிலையில் (தனக்குத் தான்) உதவமுடியாதநிலையில் இருப்பதைக் கண்டு வருந்துகிறோம்; மாந்த இனமே அற்றுவிட்டிருக்கும், அவன் குழந்தைநிலையில் தொடங்காமல் இருந்திருந்தால் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.
"https://ta.wikibooks.org/wiki/எமிலி,_அல்லது_கல்வி_பற்றி/நூல்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது